NATIONAL

நாட்டில்  50 சதவீதத்தை  காடு மற்றும் மரங்களைப் பராமரிக்கும் கடப்பாட்டை மலேசியா  நிறைவேற்றியுள்ளது

13 ஜூன் 2023, 6:48 AM
நாட்டில்  50 சதவீதத்தை  காடு மற்றும் மரங்களைப் பராமரிக்கும் கடப்பாட்டை மலேசியா  நிறைவேற்றியுள்ளது

கூச்சிங், ஜூன் 13 – ஏறக்குறைய 30 வருடங்களாக மலேசியா தனது நிலப்பரப்பில் குறைந்தது 50 சதவீதத்தில் காடு மற்றும் மரங்களைப் பராமரிக்கும் உறுதிமொழியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்று இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹுவாங் தியோங் சிய் கூறினார். .

மலேசியாவின் மொத்த நிலப்பரப்பில் தற்போது 54.6 சதவீதம் அல்லது 18.04 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதில் இது பிரதிபலிக்கப்படுகிறது என்றார்.

“1992 இல் நடந்த ரியோ புவி மாநாட்டில், மலேசியாவின் நிலப்பரப்பில் குறைந்தது 50 சதவீதத்தில் காடு மற்றும் மரங்களைப் பராமரிக்க மலேசியா உறுதியளித்தது.

வனப் பாதுகாப்பு திறப்பு விழாவின் போது, "மலேசியாவின் ஒட்டுமொத்த வன நிலப்பரப்பில் சரவாக் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதில் பெருமை அடைகிறேன், அதாவது 42 சதவீதம் அல்லது 7.6 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது," என்று அவர் மாநாட்டில் கூறினார்.

இரண்டு நாள் மாநாடு சரவாக் பிரீமியரில் டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபங் அவர்களால் நடத்தப்பட்டது.

இந்த மாநாடு அச்சுறுத்தலுக்கு உள்ளான இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் அதன் தொடர்பாகப் பங்குதாரர்கள் அவர்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும், நிரந்தர எதிர்காலப் பாதுகாப்பு திட்டங்களைப் பட்டியலிடவும் ஒரு தளமாக அமையும்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.