போர்ட்டிக்சன், மே 30 - இங்குள்ள லுக்குட், கம்போங் ஸ்ரீ பாரிட் என்ற இடத்தில் நாய் இறப்பதற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் முதியவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.மிகவும் கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டதால் அந்த நாயின் உடம்பில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டது தொடர்பில் 44 வயதுடைய நபரிடமிருந்து
காவல்துறைக்குப் புகார் கிடைத்ததாகப் போர்ட்டிக்சன் மாவட்டக் காவல்துறைத்
தலைவர் சூப்ரிண்டெண்டன் அய்டி ஷாம் முகமது கூறினார்.
அந்த நாய் ஒரு காரில் கட்டி இழுத்துச் செல்லப்படுவதை புகார்தாரர் பார்த்துள்ளார்.
இந்த கொடூரச் செயல் அந்த நாயின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
61 வயதான நாய் உரிமையாளர் நேற்று இரவு 10.05 மணியளவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக ஒரு நாள் வைக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
NATIONAL
நாயை கொடூரமான முறையில் துன்புறுத்திய முதியவர் கைது
30 மே 2023, 6:38 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



