ANTARABANGSA

உணவகங்களில் புகைப்பிடித்தது தொடர்பில் கடந்தாண்டு 30,648 குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன

26 மே 2023, 5:11 AM
உணவகங்களில் புகைப்பிடித்தது தொடர்பில் கடந்தாண்டு 30,648 குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன

ஈப்போ, மே 26- உணவகங்களில் புகைப்பிடித்தது தொடர்பில் 76 லட்சம்

வெள்ளி மதிப்புள்ள 30,648 குற்றப்பதிவுகள் கடந்தாண்டில்

வெளியிடப்பட்டதாக சுகாதாரத் துறைத் துணைத் தலைமை இயக்குநர்

டத்தோ டாக்டர் நோர்ஹயாத்தி ருஸ்லி கூறினார்.

சிலாங்கூரில் மிக அதிகமாக 6,414 குற்றப்பதிவுகளும் ஜோகூரில் 3,095

பதிவுகளும் பகாங்கில் 2,935 பதிவுகளும் பேராக்கில் 2,808 பதிவுகளும்

பினாங்கில் 2,725 பதிவுகளும் இக்காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டதாக

அவர் தெரிவித்தார்.

உணவகங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள், மற்றும் நிலையங்கள்

பேரங்காடிகள், அரசாங்கக் கட்டிடங்கள், பொது கழிப்பிடங்கள்,

மருத்துவனைகள், கிளினிக்குகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும்

ஓய்வு பகுதிகளை இலக்காக கொண்டு இந்த சோதனை நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

ஈப்போ வட்டார நிலையிலான 2004ஆம் ஆண்டு புகையிலை விதிமுறை

தொடர்பான ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் பங்கு கொண்டப்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

புகைப்பிடிப்பதற்கு எதிராக சுகாகார அமைச்சு மேற்கொண்டு வரும்

கடுமையான நடவடிக்கை புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களைத்

தண்டிக்கும் நோக்கிலானது அல்ல- மாறாக, இச்செயல் காரணமாக

புகைப்பிடிப்பவர்களும் அவர்களை சுற்றி உள்ளவர்களும் கடுமையான

பாதிப்புகளை எதிர்நோக்குவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை

மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.