NATIONAL

மின் கட்டண இலக்கு மானியங்களை செயல்படுத்துவதற்கான முடிவு இவ்வாண்டு இறுதியில் அறிவிக்கப்படும்

25 மே 2023, 12:05 PM
மின் கட்டண இலக்கு மானியங்களை செயல்படுத்துவதற்கான முடிவு இவ்வாண்டு இறுதியில் அறிவிக்கப்படும்

ஷா ஆலம், மே 25: மின் கட்டண மானிய இலக்கு செயல்படுத்துவதற்கான புதிய சமச்சீரற்ற செலவு நிவாரணத்தின் (ICPT) முதன்மை தரவுத் தளம் (PADU) ஆய்வு முடிவு அடைந்த பிறகு ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படும்.

ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை தீபகற்பத்தில் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் கட்டண நிவாரணத்திற்கான எண்ணத்தை அமைச்சகம் இன்னும் ஆராய்ந்து வருவதாக இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் வானிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் தெரிவித்தார்.

"இது அரசாங்கத்தின் தற்போதைய கவனத்திற்கு ஏற்ப உள்ளது, இதனால் மானியங்கள் உள்நாட்டு பயனர்களுக்குக் குறிப்பாக அதிக விகிதத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குடியிருப்புக்கான மின்சார நுகர்வு அளவை அடிப்படையாகக் கொண்ட இலக்கு முறையில் செயல்படுத்தப் படுகின்றன.

"உயர் மற்றும் நடுத்தர மின்சார பயனர்கள் அல்லது T20க்கான மானியத்தை நிறுத்தும் போதுதான் அந்த நோக்கத்தை எங்களால் அடைய முடியும்.

"அடுத்த ஐசிபிடி கான முடிவு எதிர்காலத்தில் அமைச்சரவை மட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஒப்புதலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்," என்று அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

மின்சார மானியங்களை பகுத்தாய்வு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை அறிய விரும்பிய கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங்கின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்திற்கு RM10.76 பில்லியன் மின்சார கட்டண மானியங்களை ஈடுகட்ட அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக நிக் நஸ்மி கூறினார்.

"இது தீபகற்ப மலேசியாவில் உள்ள மொத்த நுகர்வோர்களில் 99 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 9.5 மில்லியன் மின்சார நுகர்வோர் மின்சார உற்பத்திக்கான எரிபொருளின் விலை அதிகரிப்பால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதாகும்.

"கடந்த ஆறு மாதங்களாக எரிபொருள் செலவுகள் மற்றும் பிற உற்பத்தி செலவுகளை கணக்கில் கொண்டு ICPT மூலம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு மின் கட்டணம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.