NATIONAL

சமையல் எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்திற்காகத் தோராயமாக RM1.6 பில்லியன் ஒதுக்க வேண்டும்

25 மே 2023, 9:29 AM
சமையல் எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்திற்காகத் தோராயமாக RM1.6 பில்லியன் ஒதுக்க வேண்டும்

ஷா ஆலம், மே 25: சமையல் எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை (COSS) செயல்படுத்த அரசாங்கம் இந்த ஆண்டு தோராயமாக RM1.6 பில்லியன் ஒதுக்க வேண்டும்.

மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்க ஒதுக்கப்படும் தொகையானது கச்சா பாம் ஒயில்  நிர்ணயிக்கப்பட்ட விலை இயக்கத்திற்கு உட்படும் என்றார் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கான துணை அமைச்சர் பெளசியா சலே (KPDN).

"சிஇஓ வின் விலை அதிகரித்தால், திட்டத்தைச் செயல்படுத்த தேவையான நிதியும் அதிகரிக்கும்.

"இவ்வாறு 2022 இல் செயல்படுத்த புதுப்பிக்கப்பட்ட ஒதுக்கீடு RM2.42 பில்லியன் மற்றும் 2023 க்கு தேவையான மொத்த ஒதுக்கீடு RM1.6 பில்லியனாக மதிப்பிடப்படுகிறது. இது கச்சா எண்ணெய் விலைகளின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது.

"COSS ஐ செயல்படுத்த பட்ஜெட் மூலம் அறிவிக்கப்பட்ட ஒதுக்கீடு அல்லது நிதியின் அளவு 2022க்கு RM400 மில்லியன் மற்றும் இந்த ஆண்டு RM500 மில்லியன்," என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மானியங்கள் ஒதுக்கீடு பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் இங் கின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

பெளசியா மானிய விலையில் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை வழங்கும் நோக்கத்தில் KPDN நாடு முழுவதும் 366 பேக்கேஜிங் நிறுவனங்களை சந்தையில் மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்க நியமித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.