NATIONAL

போலீஸ் பிடியில் சிக்காமலிருக்க போதைப் பொருளை மண்ணில் புதைத்து வைத்த ஆடவர் கைது

18 மே 2023, 2:48 AM
போலீஸ் பிடியில் சிக்காமலிருக்க போதைப் பொருளை மண்ணில் புதைத்து வைத்த ஆடவர் கைது

கோத்தா மருடு, 18- அதிகாரிகளிடம் சிக்காமலிருப்பதற்காக ஷாபு வகை

போதைப் பொருளை நெல் வயல் ஒன்றின் அருகே உள்ள சிறிய ஆற்றின்

கரையில் புதைத்து வைத்த ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோத்தா மேருடு மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள்

தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் மாலை 3.00 மணியளவில்

மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 46 வயதுடைய அந்த நபர் கைது

செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்

போதைப் பொருளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக

மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜைரோல்னிசால் இஷாக்

கூறினார்.

இந்த ஆடவரைக் கைது செய்த தன் மூலம் 49,500 வெள்ளி மதிப்புள்ள 1,509

கிராம் ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது என்று அவர்

தெரிவித்தார்.

கைதான அந்த ஆடவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்

தாண்டேக் பகுதியிலுள்ள நெல் வயல் பகுதியிலுள்ள ஆற்றோரம் அந்த

போதைப் பொருள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது

என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.