NATIONAL

பூசாட் பண்டார்  பூச்சோங்கில் ஆடவர் சுட்டுக் கொலை

12 மே 2023, 7:42 AM
பூசாட் பண்டார்  பூச்சோங்கில் ஆடவர் சுட்டுக் கொலை

கோலாலம்பூர்,  மே  12 - பூசாட் பண்டார் பூச்சோங்கில்  உணவு  விற்பனை

மையத்திற்கு அருகே  31 வயதுடைய ஆடவர் ஒருவர்  அடையாளம் தெரியாத

நபர்களால்  சுட்டுக்கொல்லப்பட்டார்.

நேற்று அதிகாலை  மணி  12.35 அளவில் எவரிடே  உணவு   மையத்திற்கு அருகே

அந்த ஆடவர்  சுட்டுக் கொல்லப்பட்டதை பொதுமக்கள் கண்டதாகச் செர்டாங் மாவட்டப் போலீஸ் தலைவர்   ஏ.சி.பி. ஏ.அன்பழகன்  A தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டு காயத்தோடு அந்த ஆடவர் தரையில் இறந்து கிடந்தது குறித்து  தொலைபேசி மூலம் போலீஸ் தகவலைப் பெற்றனர். சவப் பரிசோதனைக்காக அவரது உடல்   செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அந்த ஆடவர்

உணவகத்திலிருந்து தமது காருக்குத் திரும்பியபோது சுடப்பட்டதாக நம்பப்படுகிறது.

சுடப்பட்ட அந்த ஆடவர்  21  குற்றப் பின்னணிகளை கொண்டிருந்ததோடு பொக்கா

எனப்படும் குற்றத்  தடுப்பு சட்டம்  மற்றும்  சொஸ்மா சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தவர் என்ற தகவலையும் அன்பழகன் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.