NATIONAL

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 2023 இன் 42வது ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்

10 மே 2023, 6:08 AM
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று  2023 இன் 42வது ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்

லாபுவான் பாஜோ (இந்தோனேசியா), மே 10: பிராந்திய குழுக்களுடன் பரஸ்பர அம்சம் உள்ள பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 2023இன் 42வது ஆசியா உச்சி மாநாடு  தொடக்க மற்றும் முழுமையான அமர்வில் கலந்து கொண்டார்.

10 ஆசியா நாடுகளைச் சேர்ந்த எட்டு அரசாங்கத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். அதில் மியான்மருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை மற்றும் மே 14 அன்று தேர்தலை எதிர் நோக்க உள்ளதால் தாய்லாந்து கலந்து கொள்ளவில்லை.

ஆசியான் பொதுச்செயலாளர் டாக்டர் காவ் கிம் ஹர்ன் மற்றும் திமோர் லெஸ்தே பிரதமர் டார் மாடன் ருவாக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிராந்திய பொருளாதார பின்னடைவை வலுப் படுத்துவதிலும் தற்போதைய சவால்களை எதிர் கொள்வதிலும் வலுவான பிராந்தியத்தை உருவாக்குவதற்கான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தலைவர்கள் தங்கள் இரண்டு நாள் கூட்டத்தை தொடங்கினர்.

 2023ஆம் ஆண்டு ஆசியா தலைவர் பதவியின் கருப்பொருளான இந்தோனேசியா, "ஆசியா விவகாரங்கள்: வளர்ச்சியின் மையம்" என்பதற்கு ஒப்ப இந்நடவடிக்கை  உள்ளது.

 

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.