NATIONAL

சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) வீடுகளின் விலையை அதிகரிக்கவில்லை

8 மே 2023, 7:23 AM
சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) வீடுகளின் விலையை அதிகரிக்கவில்லை

ரவாங், மே 8: கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் லாபம் குறைந்தாலும் சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) வீடுகளின் விலையை அதிகரிக்க விரும்பவில்லை.

துணை தலைமை நிர்வாக அதிகாரி (சொத்து மேம்பாடு) ஈர் முகமட் கமருஷாமான் முகமட் ராயிஸ் கூறுகையில், மேம்பாட்டு கழகத்தால் கட்டப்பட்ட வீடுகளை மக்கள் இன்னும் வாங்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

"நிஜமாகவே லாபத்தின் அடிப்படையில் தாக்கம் உள்ளது (கட்டிடப் பொருட்களின் விலை உயர்வு). ஆனால், துணை நிறுவனங்களிடமிருந்து பொருட்களை மொத்தமாக வாங்குவதன் மூலம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்.

"எங்கள் துணை நிறுவனமான சிலாங்கூர் இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் (SIC) ஐ பிகேஎன்எஸ்-க்கு ஒரு 'வர்த்தக இல்லமாக' மாற்றவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று நேற்று புட்டேரி அரியானாவின் மாதிரி இல்லத்துக்குச் சென்ற பிறகு அவர் கூறினார்.

சிமெண்ட், இரும்பு மற்றும் மரம் போன்ற கட்டுமானப் பொருட்களுக்கான யூனிட் விலைக் குறியீடு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாடு முழுவதும் அதிகரிப்பு கண்டுள்ளதாக மலேசிய புள்ளிவிவரத் துறை முன்பு தெரிவித்தது.

உலக அளவில் ஒரு யூனிட் இரும்பின் விலைக் குறியீடு 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், சிமென்ட் யூனிட் விலைக் குறியீடு 1.9 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் அனைத்து எஃகுக் கம்பிகளளின் விலை 0.3 முதல் 4.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதிகபட்ச குறியீடு அதிகரிப்பு மரப் பொருட்களாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.