NATIONAL

வெடி பொருளாக மாற்றி அமைக்கப்பட்ட மூன்று பிளாஸ்டிக் (பிவிசி) குழாய்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்

3 மே 2023, 8:13 AM
வெடி பொருளாக மாற்றி அமைக்கப்பட்ட மூன்று பிளாஸ்டிக் (பிவிசி) குழாய்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்

கோலாலம்பூர், மே 3 : ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள கடையொன்றில் இன்று அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கிடைத்த புகாரின் பேரில், வெடிகுண்டுகளாக மாற்றியமைக்கப்பட்ட மூன்று பிளாஸ்டிக் (பிவிசி) குழாய்களைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

பிரிக்ஃபீல்ட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அமிஹிசாம் ஷுகோர் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்த பாதுகாவலர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததன் மூலம் காலை 6 மணியளவில் இச்சம்பவம் தொடர்பான புகார் கிடைத்தது.

“காவல் துறையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டை வெடிக்கப் பயன்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல் கருவியுடன் கூடுதலாக வெடிபொருட்களாக மாற்றியமைக்கப்பட்ட மூன்று வெள்ளை நிறப் பிவிசி குழாய்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

"மேலும் சம்பவம் நடந்த இடத்தில் மூன்று கைரேகைகள் கண்டறியப்பட்டன மற்றும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய இரண்டு ஆண்களின் நடமாட்டத்தைக் கண்டறிய முடிந்தது," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 6 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறையின் ஹாட்லைன் 03-2297 9222 எண்ணிற்கும், கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2115 9999 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.