NATIONAL

இந்திய விமான நிலையத்தில்  மலேசியப்  பாம்புகள் கைப்பற்றப்பட்டன

30 ஏப்ரல் 2023, 9:03 AM
இந்திய விமான நிலையத்தில்  மலேசியப்  பாம்புகள் கைப்பற்றப்பட்டன

புதுடில்லி, ஏப்.30: சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து வந்த பெண்ணின் லக்கேஜில் 22 பாம்புகளை இந்திய விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஏர் ஏசியா விமானத்தில் வந்த அப்பெண் பயணி ஒருவர் வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்டதாக சனிக்கிழமையன்று சென்னை சுங்கத் துறை தெரிவித்தது.

அதிகாரிகள் அந்த பெண்ணின் பொருட்களைச் சோதனை செய்த போது பல்வேறு வகையான பாம்புகள் மற்றும் ஒரு பச்சோந்தியைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த ஊர்வனங்கள், சுங்கம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் கைப்பற்றப் பட்டன.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, அந்த ஊர்வனங்கள் ஒரு தெளிவான பிளாஸ்டிக் கொள்கலனில் அடைக்கப்பட்டிருந்தன.

இந்தியாவின் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் அதிக தேவை உள்ள இனங்களில் ஊர்வனவும் ஒன்றாகும். மேலும் இதுபோன்ற பறிமுதல்கள் அங்கு அடிக்கடி நடக்கக் கூடியவையாகும்.

கடந்த ஜனவரி மாதம், தாய்லாந்தில் இருந்து வந்த ஒரு பயணியிடமிருந்து 45 மலைப்பாம்புகள், எட்டு சோளப் பாம்புகள், தலா மூன்று குரங்குகள் மற்றும் ஆமைகள் ஆகியவை சென்னையில் கைப்பற்றப்பட்டன.

இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) ஆண்டு அறிக்கையின்படி, மலைப்பாம்புகள், உடும்புகள், மானிட்டர் பல்லிகள், சோளப் பாம்புகள் மற்றும் ஆப்பிரிக்க ஆமைகள் போன்ற வெளிநாட்டு இனங்களான மொத்தம் 1,204 ஊர்வனங்கள் அக்டோபர் 2022 இல் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.