NATIONAL

எல் நினோ நிகழ்வு ஜூன் மாதத்தில் நாட்டை தாக்கும்

27 ஏப்ரல் 2023, 8:06 AM
எல் நினோ நிகழ்வு ஜூன் மாதத்தில் நாட்டை தாக்கும்

ஷா ஆலம், ஏப்ரல் 27: வறண்ட மற்றும் வெப்பமான காலநிலையுடன் தென்மேற்கு பருவமழையும் ஏற்படுவதால் எல் நினோ நிகழ்வு ஜூன் மாதத்தில் நாட்டை தாக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எல் நினோ 90 சதவீதத்திற்கும் அதிகமாக அக்டோபர் வரை எதிர்பார்க்கப்படுகிறது, மேலும், இது கொரியாவில் உள்ள காலநிலை கணிப்பு மையத்திற்கு இணையாக உள்ளது என்று டாக்டர் வெர்டோலின் தஜூடின் தெரிவித்தார்.

"சரவாக் மற்றும் சபாவில் பொதுவாக எல் நினோ நிகழ்வின் முடிவில் வறண்ட மற்றும் வெப்பமாக இருக்கும். இது ஜனவரி முதல் ஏப்ரல் 2024 வரை ஏற்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

வறண்ட வானிலை, நீடித்த வறட்சி மற்றும் வெப்பம் ஆகியவை வழக்கமாக ஏற்படும் காட்டுத் தீயை அணைக்க கடினமாக்கும் மற்றும் புகைமூட்டத்தை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.

வெர்டோலின் கூற்றுப்படி, சுமத்ரா மற்றும் கலிமந்தனில் காட்டுத் தீ ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமடையும், மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் எல் நினோ தாக்கினால் அபாயகரமான அளவில் புகைமூட்டம் ஏற்பட சாத்தியம் உள்ளது.

“எனவே, இம்முறை எல் நினோவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளும் பொதுமக்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.