NATIONAL

சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஹரி ராயா ஐடில்பித்ரியின் வாழ்த்தைத் தெரிவித்தனர்

22 ஏப்ரல் 2023, 2:22 AM
சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஹரி ராயா ஐடில்பித்ரியின் வாழ்த்தைத் தெரிவித்தனர்

ஷா ஆலம், ஏப்ரல் 22: சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூரின் தெங்கு பெர்மைசூரி ஆகியோர், மக்கள் எப்பொழுதும் உண்மைகளை பேசி, நல்லது செய்வதை பழக்கமாக கொள்ள வேண்டி அழைப்பு விடுத்தார். குறிப்பாகச் சியாவல் மாதத்தில் ஏழைகளுக்குத் தங்கள் தர்மத்தை இரட்டிப்பாக்கவும் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் மக்கள் தொடர்ந்து நல்லவற்றை மட்டுமே பேசவும் எழுதவும், அவதூறு மற்றும் கெட்ட கருத்தை தவிர்க்கவும் உத்தரவிட்டனர்.

"தர்மம், திறந்த இல்ல உபசரிப்பு போன்ற மரபுகள் நிறைந்த புனித ரம்லாம் காலத்தில் நட்பைப் பேணுமாறு முஸ்லிம்களுக்கு அவரது மாட்சிமை தங்கிய சுல்தான் நினைவூட்டினார். இந்த நடைமுறை தொடர வேண்டும்.

சிலாங்கூர் அரச அலுவலகம் இன்று முகநூலில் வெளியிட்ட அறிக்கையின்படி, "முஸ்லீம்கள், குறிப்பாக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புபவர்கள், சாலைகளில் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுறுத்தியுள்ளது."

சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் அனைத்து முஸ்லீம்களுக்கும், குறிப்பாகச் சிலாங்கூரில் உள்ள மக்களுக்கும் செலமட் ஹரி ராயா ஐடில்பித்ரியின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.