NATIONAL

பட்டாசு வெடித்ததால் 17 பேர் காயமடைந்துள்ளனர் - கிளந்தான் மாநில சுகாதாரத் துறை

19 ஏப்ரல் 2023, 2:13 AM
பட்டாசு வெடித்ததால் 17 பேர் காயமடைந்துள்ளனர் - கிளந்தான் மாநில சுகாதாரத்  துறை

கோத்தா பாரு, ஏப்ரல் 19: மார்ச் 25 முதல் இதுவரை பட்டாசு வெடித்ததால் 17 பேர்

காயமடைந்ததாகக் கிளந்தான் மாநில சுகாதாரத் துறை (ஜேகேஎன்கே) பதிவு

செய்துள்ளது.

காயமடைந்தவர்கள் 9 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று அதன் இயக்குனர்

டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

பெற்றதாகவும், மற்ற ஐந்து பேர் வெளிநோயாளி சிகிச்சை பெற்றதாகவும் அவர்

கூறினார்.

பெரும்பாலும் புகாரளிக்கப்பட்ட சம்பவங்களில் காயங்கள் முகம், கண்கள் மற்றும்

உடைந்த விரல்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.

“இந்த மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காயங்கள் அதிகரிப்பதைக் கிளந்தான்

மாநிலச் சுகாதாரத் துறை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.

எனவே, எதிர்பாராத சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள்

பட்டாசு வெடித்து விளையாடாமல் இருப்பதை எப்போதும் கண்காணிக்க வேண்டும்,``என்றார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.