NATIONAL

மனைவியை கொன்றதாக நீதிமன்றத்தில் நபர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

12 ஏப்ரல் 2023, 8:38 AM
மனைவியை கொன்றதாக நீதிமன்றத்தில் நபர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

டுங்குன், ஏப்ரல் 12: இந்த மாத தொடக்கத்தில், புக்கிட் பீசியில் தனது மனைவியை கொன்ற குற்றச்சாட்டின் பேரில், நபர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

முகமட் அமீர் ஹம்சா (32), மாஜிஸ்திரேட் நோரடிலா அப் லத்தீஃப் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப் பட்டபோது புரிந்து கொண்டதாக தலையசைத்தார்.

ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 7.30 முதல் 8 மணிக்குள் கம்போங் பெசோல், பத்து 6, புக்கிட் பீசியில் ரூபியா சப்து (41) என்பவரின் மரணத்திற்குக் காரணமான தாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

தண்டனைச் சட்டப் பிரிவு 302ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.

உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் கொலை வழக்கு இருப்பதால் குற்றம் சாட்டப் பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. வழக்கை மீண்டும் ஜூன் 13-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அரசு தரப்புக்கு வழக்கறிஞர் நூர் அதிரா ஹாஷிம் வாதிட,  குற்றம் சாட்டப்பட்டவருக்கு  தேசியச் சட்ட உதவி அறக்கட்டளையின் (YBGK) வழக்கறிஞர் ஹபிசுல் ஃபாரிஸ் சே ரஸ்லான் வாதிட்டார்.

தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது வீட்டில் இரும்பு சுத்தியலால் ரூபியா தாக்கப்பட்டு இறந்ததாக நம்பப்படுகிறது என ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.

இறந்தவருக்கு முந்தைய திருமணத்தில் ஆறு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவரை திருமணம் செய்த பின்னர், அவர்களுக்கு மூன்று மாத பெண் குழந்தை உள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.