NATIONAL

சிலாங்கூர் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஒன் இஸ்மாயில் காலமானார்

6 ஏப்ரல் 2023, 2:26 AM
சிலாங்கூர் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஒன் இஸ்மாயில் காலமானார்

ஷா ஆலம், ஏப்ரல் 6: சிலாங்கூர் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஒன் இஸ்மாயில், தனது 84 வயதில் நேற்று இரவு 7.15 மணியளவில் போர்ட் கிள்ளான் கம்போங் ராஜா உடாவில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் காலமானார்.

பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது, இந்த விஷயத்தை அவரது மகள் டத்தின் படுகா டத்தோ நோர் ஹயாட்டி தெரிவித்தார்.

“எனது தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி உண்மைதான். அப்பா மிகவும் நிம்மதியாக இறந்தார். அவருக்கு எந்த வித நோயும் இல்லை, முதுமை காரணத்தினால் காலமானார். என் தந்தை அமைதியாக இறைவன் அடி சென்றார்," என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

1995 முதல் 2008 வரை மூன்று முறை சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராகவும், 2004 முதல் 2007 வரை அம்னோ மலேசியாவின் நிரந்தர தலைவராகவும், 1974 முதல் 1982 வரை மூன்று முறை செமந்தா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தார்.

அவரது உடல் கம்போங் ராஜா உடா மசூதியில் பிரார்த்தனை செய்யப்பட்டு இன்று சோஹோர் தொழுகைக்குப் பிறகு கம்போங் ராஜா உடா கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.