NATIONAL

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து சிறுவன் மரணம்

5 ஏப்ரல் 2023, 8:03 AM
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து சிறுவன் மரணம்

கோலாலம்பூர், ஏப் 5- ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து

ஏழு வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் இங்குள்ள

ஸ்தபாக், ஜாலான் லங்காவியில் நேற்று நிகழ்ந்தது.

அச்சிறுவன் விழுந்து கிடந்ததை இரவு 7.00 மணியளவில் அறிந்த பொது

மக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.

சோமாலிய பிரஜையான அந்த ஏழு வயதுச் சிறுவன் அந்த ஆடம்பர

அடுக்குமாடி குடியிருப்பின் ஏ புளேக்கில் குர்ஆன் வகுப்பில் கலந்து

கொண்டு வீடு திரும்பிய போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தன் மகனை அழைத்து வரச் சென்ற அவரின் தாயார் அவர் எங்கும்

காணப்படாததைத் அறிந்து மிகுந்த பதட்டத்திற்குள்ளானார்.

அந்த சிறுவனின் திருக்குர் ஆன் புத்தகம் அடங்கிய பை அடுக்குமாடி

குடியிருப்பின் பி புளோக்கில் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.