ஷா ஆலம், ஏப்ரல் 4: செலாயாங் நகராட்சி (எம்பிஎஸ்), ஏப்ரல் 1 முதல் 22 வரை 2024 வரவு செலவுத் திட்டத்தை வரைவதில் கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளூர் மக்களை அழைக்கிறது.
கார்ப்பரேட் துறையின் மக்கள் தொடர்பு பிரிவின் கீழ், வரையப்படும் வரவு செலவுத் திட்டம் செலாயாங் நகராட்சியில் வாழ்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவும் மற்றும் பொது நலனை உறுதி செய்யக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
"2024 ஆம் ஆண்டுக்கான செலாயாங் மாநகராட்சி பட்ஜெட் தேவைக்கேற்ப தயாரிக்கப் படுவதை உறுதி செய்வதற்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க குடியிருப்பாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கூறுகையில் செலாயாங் நகராட்சி பல்வேறு விவகாரங்கள் குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பை மேற்கொண்டு வருகிறது, கேள்விகளுக்கு முழுமையாக பதிலளிக்கும் 20 நபர்களுக்கு செலாயாங் மாநகராட்சி RM100 ரொக்கப் பரிசை வழங்கும்.
" வெற்றியாளர்களின் பட்டியல் செலாயாங் மாநகராட்சி அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் மே 15 அன்று அறிவிக்கப்படும்," .
https://forms.gle/nb695X9bCt6U








