NATIONAL

தன்னார்வ வரி அறிவிப்பு திட்டம் ரி.ம 1 பில்லியனுக்கும் கூடுதல் வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

3 ஏப்ரல் 2023, 7:58 AM
தன்னார்வ வரி அறிவிப்பு திட்டம் ரி.ம 1 பில்லியனுக்கும் கூடுதல் வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 3: அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் மே 31 திகதி வரை தொடங்கும் சிறப்பு தன்னார்வ  அறிவிப்பு  திட்டம்,  நாட்டிற்கு RM1 பில்லியனுக்கும் கூடுதல் வருமானம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி மற்றும் மறைமுக வரிகள் மீதான 100 சதவீத அபராதங்களுக்கு பொதுமன்னிப்பு திட்டமானது இந்த ஆண்டு கூடுதலாக 500 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று துணை நிதி அமைச்சர் கூறினார்.

"முன்னதாக உள்நாட்டு வருவாய் வாரியம் (ஐ.ஆர்.பி) செயல்படுத்திய தன்னார்வ அறிவிப்பு திட்டத்தின் மூலம் வரி வசூல் செய்த தன் அடிப்படையில், இந்த ஆண்டு RM500 மில்லியனுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

"மே 31, 2024 வரையிலான காலத்திற்கும் RM1 பில்லியன்" என்று ஸ்டீவன் சிம் சீ கியோங் இன்று டேவான் ராக்யாட்டில் நடந்த நிறைவு அமர்வில் கூறினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பிரதம மந்திரி சமர்ப்பித்தபோது, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க உதவும் திட்டத்தை ஐ.ஆர்.பி மற்றும் ஜபதன் கஸ்டம் திராஜா மலேசியா சுங்கத் துறை மீண்டும் செயல்படுத்துவதாக அறிவித்தார்.

இந்த முயற்சியைப் பயன்படுத்தி வரி செலுத்துவோருக்கும் இந்தத் திட்டம் பயனளிக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.