ANTARABANGSA

பிபிஏஎஸ்: புத்தகத்தை இரவல் பெறும் காலம் ஏப்ரல் 1 முதல் ஒரு மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

31 மார்ச் 2023, 6:11 AM
பிபிஏஎஸ்: புத்தகத்தை இரவல் பெறும் காலம் ஏப்ரல் 1 முதல் ஒரு மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஷா ஆலம், மார்ச் 31: சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) புத்தகத்தை இரவல் பெறும் காலத்தை ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது.

மார்ச் 1 அன்று புத்தகத்தை இரவல் பெற்றவர்களின் அளவு அதிகரித்த அறிவிப்பிலிருந்து கிடைத்த  கருத்துக்களை தொடர்ந்து நிறுவனம் இந்த முடிவை அறிவித்தது.

"ஆம்! அனைவரின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கும். ஏப்ரல் 1 முதல், அனைத்து பிபிஏஎஸ் வளாகங்களிலும் புத்தகத்தை இரவல் பெறும் காலம் ஒரு மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

"இரவல்  கால நீட்டிப்பு உங்களுக்கு வாசிப்புப் பொருட்களை படித்து முடிக்க அதிக வாய்ப்புகளை வழங்கும் என்று நம்புகிறேன்" என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

மார்ச் 1 அன்று, பிபிஏஎஸ் ஒவ்வொரு நபருக்கும் புத்தகத்தை இரவல் பெறும்  வாசிப்பு பொருட்களின் எண்ணிக்கை 10 முதல் 20 பிரதிகள் வரை அதிகரிப்பதாகவும் அறிவித்தது.

மக்கள் அனைத்து மாநில நூலகங்களில் புத்தகங்களை இரவல் வாங்கலாம் அல்லது BooksFly2U சேவை மூலம் ஆர்டர் செய்யலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.