NATIONAL

நாட்டின் தென்னை விதை உற்பத்தியில் சிலாங்கூர் முன்னிலை வகிக்கும்

20 மார்ச் 2023, 8:43 AM
நாட்டின் தென்னை விதை உற்பத்தியில் சிலாங்கூர் முன்னிலை வகிக்கும்

சபாக் பெர்ணம், மார்ச் 20: ‘விதை வளர்ப்பவர்கள்’ திட்டத்தின் மூலம் நாட்டில் தென்னை மர விதைகளை உற்பத்தி செய்வதில் சிலாங்கூர் முன்னணியில் இருக்கும்.

மாநில வேளாண்மைத் துறையின் துணை இயக்குநர், இங்குள்ள சுங்கை ஆயர் தாவாரில் நான்கு தொழில் முனைவோரை உள்ளடக்கிய இந்த ஆண்டு தொடக்கத் திட்டம் கொண்டுள்ளதாக கூறினார்..

வான் முகமட் துல்கர்னைன் பஹாருடின் கருத்துப்படி, நாடு எதிர்நோக்கும் தேங்காய் விநியோக பிரச்சனைக்கு இந்த முயற்சி நீண்டகால தீர்வாகும்.

“மலேசியாவில் தேங்காய் உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய மாவட்டம் சபக் பெர்ணம். எனவே, 50 ஏக்கர் பரப்பளவில் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம்..

இந்தத் திட்டத்தின் மூலம் சபாக் பெர்ணம் நாடு முழுவதற்குமான தரமான தேங்காய் விதைகளை உற்பத்தி செய்யும் மையமாகவும் மாறும் என நம்புகிறேன் என்றார் அவர்.

நேற்று ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் சபாக் பெர்ணம் மாவட்ட நிகழ்ச்சியில் அவர் சந்தித்தார். மேலும்  விவசாய அடிப்படைத் தொழில் ஆட்சிக்குழு உறுப்பினர்     ஐர் இஸாம் ஹஷிம்  கலந்து கொண்டார்.

வான் முகமது சுல்கர்னைன் மேலும் கூறுகையில், இந்தத் திட்டமானது 'தேக்னானன்' மற்றும் 'மலேயன் யேல்லோ டல்வ்' வகையிலான தென்னை மரங்களில் இருந்து இரண்டு வகை கலவையான 'ஹைப்ரிட் மாடாக்' விதைகளை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதைகள் ஒரு மரத்திற்கு ரி.ம 50 முதல் ரி.ம 70 வரையிலான அதிக விற்பனை மதிப்பைக் கொண்டிருப்பதைத் தவிர சிறந்த தேங்காய் வகைகளில் ஒன்றாகும் என்று அவர் விளக்கினார்.

“தற்போது வெளி நாடுகளில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், அதிக தேங்காய்களை உற்பத்தி செய்ய உதவுவதுடன், நாட்டின் தேங்காய் வழங்கல் பிரச்சினையையும் தீர்க்க முடியும் என  நாங்கள் நம்புகிறோம்," என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.