NATIONAL

ஜொகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு RM300 மதிப்பிலான வவுச்சர் வழங்கப்படும்

19 மார்ச் 2023, 2:44 AM
ஜொகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு RM300 மதிப்பிலான வவுச்சர் வழங்கப்படும்

மலாக்கா, மார்ச் 19: ஜொகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மற்றும் B40 மக்கள் 1,000 பேர் பாயுங் ரஹ்மா திட்டத்தின் கீழ் RM300 மதிப்பிலான வவுச்சர்களைப் பெறுவார்கள் குறிப்பாக மின்சார உபகரணங்கள் வாங்குவதற்கு ஆகும்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு (KPDN) அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் கூறுகையில், இந்த வவுச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குறிப்பாக பத்து பஹாட் மற்றும் செகாமட்டில் உள்ளவர்கள், சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் போன்ற மின் சாதனங்களை வாங்க வழங்கப்பட்டுள்ளது.

தனது தரப்புக்கும், மின்சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகை விலையில் மின்சார உபகரணங்களை விற்க முன் வருவதாக அவர் கூறினார்.

இந்த திட்டம் குறித்த அனைத்து நடவடிக்கைகளும் இன்று முதல் தனது அமைச்சின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் என்றும், அதைப் பெறுபவர்கள் உண்மையில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட B40 சேர்ந்த மக்கள் என்பதும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.