NATIONAL

முதலீட்டாளர்களுக்கு 11 வித ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன - டத்தோ மந்திரி புசார்

16 மார்ச் 2023, 7:31 AM
முதலீட்டாளர்களுக்கு  11 வித  ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன - டத்தோ மந்திரி புசார்

ஷா ஆலாம், மார்ச் 16: சிலாங்கூர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு மொத்தம் 11 ஊக்குவிப்புகள்  வழங்கப்படுகின்றன என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

விரைவான அனுமதி,  குறுகிய ஒப்புதல் காலம், மதிப்பீட்டு வரி மற்றும் வணிக உரிமக் கட்டண விலக்கு போன்ற நான்கு அம்சங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தொழில்துறை மேம்பாட்டாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு, ஏழு ஊக்குவிப்புகள் வழங்கப் படுகின்றன, அதாவது நில பிரீமியங்கள், வட்டியில்லா மேம்பாட்டு கட்டண தவணைகள் மற்றும் குறைந்த விலை தொழிற்சாலைகளை வழங்குவதற்கான வரி சலுகைகள் ஆகும்.

"குடிமக்கள் அல்லது நிரந்தரமாக வசிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரியல் எஸ்டேட் உரிமை ஒதுக்கீடுகள், நீண்ட கால மற்றும் ஸ்ராத்தா அற்ற  மேம்பாட்டு குத்தகைகள், நில வரி மற்றும் விலக்கு ஆகியவையும் வழங்கப் படுகின்றன.

"ஊக்குவிப்புகள் ஆரம்ப வளர்ச்சி செலவுச் சுமையைக் குறைக்க உதவுகின்றன, இதனால் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் வளர்ச்சி நடவடிக்கைகளை விரைவு படுத்துவதற்கான ஆர்வத்தை ஈர்க்கிறது," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.