NATIONAL

சிலாங்கூரில் ஒன்பது ஆதரவற்றோர் இல்லங்களை மேம்படுத்த RM180,000 மானியம் வழங்கப்பட்டது

14 மார்ச் 2023, 9:57 AM
சிலாங்கூரில் ஒன்பது ஆதரவற்றோர் இல்லங்களை மேம்படுத்த RM180,000 மானியம் வழங்கப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 14: சிலாங்கூரில் உள்ள ஒன்பது ஆதரவற்றோர் இல்லங்கள் வசதிகளை மேம்படுத்த மாநில அரசிடமிருந்து RM180,000 மானியம் பெற்றன.

பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு எஸ்கோ, ஆதரவற்றோர் இல்லங்களை விட்டு வெளியேறிய பிறகு, பெண்களின் திறன்களை வளர்ப்பதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும்  இந்த மானியம் வழங்கப்படுவதாக கூறினார்.

"மாநில அரசு, 10 பராமரிப்பாளர்களுக்கு தலா RM2,000 தொகையில் தீவிரக் குழந்தை மேம்பாட்டு கல்விக்கான மானியங்களை வழங்கியது" என்று டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறினார்.

பெண் தொழில்முனைவோர், இளம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10 பெண் பிரமுகர்கள் தங்கள் துறைகளில் சாதனை படைத்ததற்காக 2023 ஆண்டுக்கான சிலாங்கூர் அளவிலான சர்வதேச மகளிர் தின விழாவில் பல்வேறு விருதுகளைப் பெற்றனர்.

இதற்கிடையில், டாக்டர் சித்தி மரியா 12 திட்டங்களை அறிவித்தார், அவை இந்த ஆண்டு பெண்கள் மேம்பாட்டு நிலைக்குழு வால் 4 மில்லியனுக்கும் அதிகமான ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

``அவற்றில் தங்குமிடம் மானியம், M40 மழலையர் பள்ளி மானியம், இளம் தொழில் முனைவோர் டிஜிட்டல் மீடியா ஊக்கத்தொகை மற்றும் தனித்து வாழும்  தாய்மார்களின்  பொருளாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு ஆகியவை அடங்கும்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.