NATIONAL

மலேசியப் பூப்பந்து பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது

11 மார்ச் 2023, 10:12 AM
மலேசியப் பூப்பந்து பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 11: மலேசியப் பூப்பந்து பெண்கள் இரட்டையர் பிரிவின் சாம்பியன் பேர்லி டான்-எம்.தினா, முல்ஹெய்மில் நடந்த ஜெர்மன் ஓபன் 2023 போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இன்று காலை (ஜெர்மனியில் வெள்ளிக்கிழமை இரவு) நடந்த சூப்பர் 300 போட்டியின் காலிறுதி சுற்றில் உலகின் ஆறாவது தரவரிசை ஜோடியான இவர்கள்   ஜப்பானின் மயூ மாட்சுமோட்டோ-வகானா நாகஹாரா ஜோடியை 21-17, 18-21, 21-11 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர்.

இதன் விளைவாக 2022 காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியன் ஆன இவர்கள் உலக தரவரிசையில் முதலிடத்திலுள்ள ஜப்பானிய ஜோடியான நமி மாட்சுயாமா-சிஹாரு ஷிடாவுடன் இன்று இரவு களமிறங்குவர், இது மலேசிய நேரப்படி இன்று நள்ளிரவு 12.00மணிக்கு நடைபெறும்.

முந்தைய சந்திப்பு பதிவுகளின் படி, போட்டியின் மூன்றாம் நிலையில் இருந்த பேர்லி-தினா, 2022 பிரெஞ்ச் ஓபனில் நமி-சிஹாருவை ஒருமுறை மட்டுமே தோற்கடித்துள்ளனர், அதற்கு முன் உலகின் இரண்டாவது தரவரிசையில் உள்ள அந்த இரட்டையர்களிடம்  ஏழு முறை தோல்வியடைந்துள்ளனர்.

இதற்கிடையில், நாட்டின் கலப்பு இரட்டையர், சென் தாங் ஜி-தோ ஈ வெய் ஜோடி, உலகத் தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள தென் கொரியாவின் கிம் வோன் ஹோ-ஜியோங் நா யூன் ஜோடியிடம் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினர்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.