NATIONAL

ஜொகூரில் வெள்ளத்தால் 160,000 கிலோகிராம் கழிவுகள் மற்றும் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன

7 மார்ச் 2023, 11:29 AM
ஜொகூரில் வெள்ளத்தால் 160,000 கிலோகிராம் கழிவுகள் மற்றும் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன

ஜொகூர் பாரு, மார்ச் 7: கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை மாநிலத்தில் மொத்தம் 160,000 கிலோகிராம் கழிவுகள் மற்றும் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

SWM சுற்றுச்சூழல் நிறுவனம் வெள்ள நிவாரண நடவடிக்கையின் கீழ் தூய்மைப்படுத்தும் பணியை செயல்படுத்தத் தொடங்கியது

SWM சுற்றுச்சூழல் நிறுவன மேலாளர் முகமட் நோர்லிசம் முகமட் நோர்டின் கூறுகையில், வெள்ளப் பேரிடர் இதுவரை பல மாவட்டங்களை தாக்கியிருந்தாலும், ஆறு மாவட்டங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

குளுவாங், செகாமட், ஜொகூர் பாரு, கூலாய், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 220 தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) திடக்கழிவு மேலாண்மை சேவை மூலம் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை SWM சுற்றுச்சூழல் தொடங்கியுள்ளதாக முகமட் நோர்லிசம் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.