NATIONAL

மோசடி மற்றும் தவறான ஆவணங்களைப் பயன்படுத்தியக் முன்னாள் ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

7 மார்ச் 2023, 7:33 AM
மோசடி மற்றும் தவறான ஆவணங்களைப் பயன்படுத்தியக் முன்னாள் ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

ஷா ஆலம், மார்ச் 7: 2016 ஆம் ஆண்டு உலு சிலாங்கூரில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடத் தொகுதியின் கட்டுமானத் திட்டத்தில் மோசடி செய்த மற்றும் தவறான ஆவணங்களை பயன்படுத்தியதாக முன்னாள் ஒப்பந்ததாரர் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

35 வயதான சிவநேசன், தேசிய வகை உலு சிலாங்கூர் தமிழ் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை (PIBG) மூன்று வகுப்பறைகளைக் கொண்ட ஒரு கட்டிடத் தொகுதியைக் கட்டி முடிக்க RM285,000 பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

24 ஆகஸ்ட் 2016 முதல் 26 அக்டோபர் 2016 வரை சுங்கை பூலோவில் உள்ள வங்கியில் இந்தச் செயலைச் செய்ததாக சிவநேசன் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, சாட்டையடி மற்றும் அபராதம் ஆகியவற்றை விதிக்கலாம்

26 அக்டோபர் 2016 அன்று பள்ளியில் வகுப்பறை அலகுகளின் புதிய தொகுதியைக் கட்டுவதற்கு முன்மொழியப்பட்ட பொதுப்பணித் துறையின் ஒப்புதல் கடிதத்தைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் காட்டுவதற்கு தவறான ஆவணத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டையும் அவர் எதிர்கொண்டார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 471 இன் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் 465 வது பிரிவின் கீழ் தண்டிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிலாங்கூர் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (MACC) வழக்குத் தொடரும் அதிகாரி முகமட் அலிஃப் ஷஹாருஜாமான் உத்தரவாதத்துடன் RM100,000 ஜாமீன், ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் அலுவலகத்திற்கு வந்து வருகை பதிவு செய்தல் மற்றும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.விக்ரமன் தனது தரப்பினர் இப்போது ஜொகூரில் கோயில் உதவியாளராக மாதத்திற்கு ரிங்கிட் 1,200 வருமானத்துடன் பணிபுரிவதால் ஜாமீன் தொகையைக் குறைக்க விண்ணப்பித்தார்.

"சிவநேசன் தனது மனைவி, அவரது பெற்றோர் மற்றும் கல்லூரியில் படிக்கும் அவரது தங்கையை ஆகியோரையும் ஆதரித்து வருகிறார்," என்று அவர் கூறினார்.

நீதிபதி ரோசிலா சல்லே உத்தரவாதத்துடன் RM12,000 ஜாமீன் விதித்தார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.