அங்காரா, மார்ச் 1-
தென்கிழக்கு துருக்கியில் உள்ள மாலத்யா மாநிலத்தில் ரிக்டர்அளவில் 5.6 எனப் பதிவான நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்ததோடு 140 பேர்
காயமடைந்ததாகத் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை நிறுவனம் நேற்று தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் யெசிலியூர்ட் மாவட்டத்தில் 6.96 கிலோமீட்டர் ஆழத்தில்
மையமிட்டிருந்தது.
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதியன்று ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் 44,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்ட துருக்கியிலுள்ள 10 பிராந்தியங்களில் மாலத்யா
பகுதியும் ஒன்றாகும்.
ANTARABANGSA
துருக்கியில் திங்களன்று மீண்டும் பூகம்பம்- இருவர் பலி, 140 பேர் காயம்
1 மார்ச் 2023, 4:45 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
உலு கிள்ளான், யூகே பெர்டானா வில் உள்ள கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையின் (EKVE) உயர்த்தப்பட்ட யூ-திருப்ப பாதை திறக்கப் பட்டு விட்டது.
Pakiya
14 பிப்ரவரி 2026

antarabangsa
இந்தியாவுக்கு 25 விழுக்காடு வரி விதிப்பு
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்டத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா- இந்தோனேசியா இணக்கம்
n.pakiya
31 ஜூலை 2025

antarabangsa
பூகம்பத்தின் எதிரொலி- ஜப்பானில் 1.3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்தன
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




