அங்காரா, பிப் 14: நாட்டின் தென்கிழக்கில் நிலநடுக்கம் ஏற்பட்ட 198 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப் பட்டதாகத் துருக்கி ஊடகத்தை மேற்கோள் காட்டி ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒளிபரப்பாளரான டிஆர்டி ஹேபரின் கூற்றுப்படி, அவ்விருவரும் கஹ்ராமன்மாராஸ் இடத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை துருக்கியில் 31,500யைத் தாண்டியுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு சிரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,500 எனத் தெரிவித்துள்ளது.
மேலும், சிரியா சுகாதார அமைச்சகம், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,410 பேரைத் தாண்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
- பெர்னாமா








