ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தால் குறைந்தது 31,643 பேர் இறந்துள்ளனர்

14 பிப்ரவரி 2023, 2:57 AM
துருக்கி நிலநடுக்கத்தால் குறைந்தது 31,643 பேர் இறந்துள்ளனர்

அங்காரா, பிப் 14: தெற்கு துருக்கியில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 31,643 பேர் பலியாகியுள்ளதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை (AFAD) அறிக்கையின்படி, 238,459க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தற்போது தேடல் மற்றும் மீட்பு (SAR) பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேடல் மற்றும் மீட்பு பணியில் 74 நாடுகளைச் சேர்ந்த 9,793 வெளிநாட்டு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சகம் திங்கட்கிழமை அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் தேடல் மற்றும் மீட்பு பணிக்கு உதவ 170 ஹெலிகாப்டர்கள், 76 விமானங்கள் மற்றும் 26 கப்பல்களும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டன.

மேலும், உயிர் பிழைத்தவர்களுக்கு இடமளிக்க மொத்தம் 155,379 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.