ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

11 பிப்ரவரி 2023, 8:29 AM
துருக்கி நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

நியூயார்க், பிப் 11: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 20,318 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அனடோலு ஏஜென்சி (ஏஏ) தெரிவித்துள்ளது.

திங்களன்று ஏற்பட்ட 7.7 மற்றும் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள்

கஹ்ராமன்மாராஸ் இடத்தை மையமாகக் கொண்டு அடானா, அதியமான், தியார்பாகிர்,

காசியான்டெப், ஹதாய், கிலிஸ், மாலத்யா, உஸ்மானிய மற்றும் சன்லியுர்ஃபா

உள்ளிட்ட 10 இடங்களில் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப்

பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

சிரியா, லெபனான் உள்ளிட்ட பல நாடுகளும் இந்த நில நடுக்கத்தை உணர்ந்தன. அங்கு

தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு

வருகின்றன.

சமீபத்தில், கஹ்ரமன்மாராஸில் நிலநடுக்கம் ஏற்பட்ட 117 மணி நேரத்திற்குப் பிறகு 34

வயது நபர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.