ANTARABANGSA

சிரியா நிலநடுக்கத்தில் குறைந்தது 3,384 பேர் உயிரிழந்துள்ளனர்

11 பிப்ரவரி 2023, 3:09 AM
சிரியா நிலநடுக்கத்தில் குறைந்தது 3,384 பேர் உயிரிழந்துள்ளனர்

அங்காரா, பிப் 11: தெற்கு துருக்கியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சிரியாவில் குறைந்தது 3,384 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

மனித உரிமைகளுக்கான சிரிய நெட்வொர்க், சிரிய சிவில் பாதுகாப்பு மற்றும் பிற உள்ளூர் தரவுகளின்படி,  போராட்டவாதிகளின்  கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு சிரியாவில் குறைந்தது 2,037 பேர் இறந்தனர் மற்றும் 2,950 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில்,  அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் தார்துஸ் ஆகிய இடங்களில் குறைந்தது 1,347 இறந்துள்ளனர் மற்றும் 2,295 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிரியா சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது. இதனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,200 க்கும் அதிகமாக உள்ளது என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.