ANTARABANGSA

பிரேசில் 4-2 கோல் கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறத் தவறியது

10 டிசம்பர் 2022, 3:49 AM
பிரேசில் 4-2 கோல் கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறத் தவறியது

ஷா ஆலம், டிச 10: கட்டாரின் தோஹாவில் உள்ள எஜுகேஷன் சிட்டி  அரங்கில் நேற்று இரவு நடைபெற்ற 2022 உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் ஐந்து முறை சாம்பியனான பிரேசில், குரோஷியாவிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு முன்னேற தவறியது.

90 நிமிட ஆட்டத்துக்குப் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

நெய்மர் கூடுதல் நேரத்தின் பிற்பகுதியில் கோ-அஹெட் கோலுடன் பிரேசிலை முன்னிலை படுத்தினார், ஆனால் இரண்டாவது பாதியில் புருனோ பெட்கோவிச் கோல் கணக்கைச் சமன் செய்தார்.

முடிவு 1-1 என நீடித்தது, பெனால்டி கோல் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா 4-3 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.