ANTARABANGSA

ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவான நில நடுக்கம் மேற்கு ஜாவாவை உலுக்கியது

8 டிசம்பர் 2022, 3:55 AM
ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவான நில நடுக்கம் மேற்கு ஜாவாவை உலுக்கியது

ஜாகர்த்தா, டிச 8- ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவான நில நடுக்கம் மேற்கு

ஜாவாவின் சுக்காபூமி நகரை இன்று உலுக்கியது. இந்த நில நடுக்கம்

உள்நாட்டு நேரப்படி காலை 7.00 மணிக்கு ஏற்பட்டதாக அந்நாட்டின் புவி

இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது.

இந்த நில நடுக்கும் சுக்காபூமி நகரின் தென்கிழக்கே 22 கிலோ மீட்டர்

தொலைவிலும் 104 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்தது.

பூகம்பத்தின் மையப்பகுதியிலிருந்து 92 கிலோமீட்டர் தொலைவிலுள்ள

தென் ஜாகர்த்தாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த பூகம்பத்தின் எதிரொலியாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும்

விடுக்கப்படவில்லை. உயிர் அல்லது பொருட்சேதம் குறித்து இதுவரை

எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.