ALAM SEKITAR & CUACA

கடுமையான கடல் பெருக்கு அபாயம்- விழிப்புடன் இருக்க கிள்ளான் மக்களுக்கு அறிவுறுத்தல்

23 நவம்பர் 2022, 8:04 AM
கடுமையான கடல் பெருக்கு அபாயம்- விழிப்புடன் இருக்க கிள்ளான் மக்களுக்கு அறிவுறுத்தல்

ஷா ஆலம், நவ. 23 - கிள்ளான் வட்டாரத்தில் நேற்று  தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட கூடும் என்பதால் கிள்ளான் மாவட்டத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இப்பகுதியில்  நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆம் தேதிகளில் கடல் மட்டம் 5.3 மீட்டர் அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கிள்ளான் மாவட்ட  மற்றும் நில அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு முகநூல் வழியாக வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியது.

எனவே, கிள்ளான் குடியிருப்பாளர்கள் எப்போதும் விழிப்புடன் தற்போதைய சுற்றுச்சூழல் நிலை குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதேசமயம், வானிலை பற்றிய சமீபத்திய தகவல்கள் மற்றும்  மேலதிக வழிமுறைகளைப் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும் எனவும் அது நினைவூட்டியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.