ALAM SEKITAR & CUACA

22 சிலாங்கூர் தொகுதிகளிலும் காலையில் வாக்களியுங்கள், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

14 நவம்பர் 2022, 5:47 PM
22 சிலாங்கூர் தொகுதிகளிலும் காலையில் வாக்களியுங்கள், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

ஷா ஆலம், நவம்பர் 14: சிலாங்கூரில் உள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள்  காலையிலேயே வாக்களிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள். நவம்பர் 19 ஆம் தேதி மாலையில் அனைத்து  இடங்களிலும் இடியுடன் கூடிய மழை  பெய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.,

காலையில், சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், காப்பார், கிள்ளான் மற்றும் கோலா லங்காட் நாடாளுமன்றத் தொகுதிகளில் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று அறிவித்தது.

அதே அறிவிப்பில், சுங்கை புசார், தஞ்சோங் காராங், கோலா சிலாங்கூர், ஷா ஆலம் மற்றும் கோத்தா ராஜா ஆகிய இடங்களில் மேகமூட்டமான வானிலை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில், காலையில் மழை பெய்ய வாய்ப்பில்லை.

இருப்பினும், மதியம் செலாயாங், கோம்பாக், அம்பாங், பாண்டன், உலு லங்காட், பாங்கி, பூச்சோங், சுபாங், டமான்சாரா, பெட்டாலிங் ஜெயா, சுங்கை பூலோ மற்றும் சிப்பாங் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கை வழங்கப் பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, இந்த முன்னறிவிப்பை மெட்மலேசியா இணையதளத்தில் பின்வரும் இணைப்பில் காணலாம்: https://www.met.gov.my/info/pru15/

"வேகமான மற்றும் துல்லியமான சமீபத்திய வானிலை தகவல்களுக்கு www.met.gov.my இல் உள்ள எங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளத்தைப் பின்தொடரவும். உங்கள் கடமையை செய்து உங்கள் உரிமைகளை நிறைவேற்றுங்கள். மலேசியர்களே பாதுகாப்பாக வாக்களியுங்கள்,” என்று அந்த துறை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.