ECONOMY

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எம்.ஆர்.டி. தூணை மோதியது. இருவர் பலி, மூவர் காயம்

24 அக்டோபர் 2022, 7:58 AM
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எம்.ஆர்.டி. தூணை மோதியது. இருவர் பலி, மூவர் காயம்

கோலாலம்பூர், அக் 24- ஐவர் பயணம் செய்த டோயோட்டா இனோவா வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எம்.ஆர்.டி. இரயில் பாதை  தூணை மோதியதில் அதில் பயணம் செய்த இருவர் உயிரிழந்ததோடு மேலும் மூவர் காயங்களுக்குள்ளாயினர். இக்கோர விபத்து இன்று அதிகாலை ஈகோ செராஸ் பேரங்காடி எதிரே நிகழ்ந்தது.

இவ்விபத்து குறித்து அதிகாலை 6.42 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து எழு உறுப்பினர்கள் அடங்கிய தீயணைப்பு குழுவினர் ஒன்பது நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக செராஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அதிகாரி முகமது ரிட்சுவான் அகமது கூறினார்.

அந்த வாகனத்தில் சிக்கிக் கொண்டிருந்த ஐவரையும் தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்னர் காலை மணி 7.06 அளவில் மீட்டதாக அவர் சொன்னார்.

வாகனத்தின் ஓட்டுநரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பயணியும் சம்பவ இடத்திலேயே உயரிழந்து விட்டதை அங்கிருந்த மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தினர்.

காயங்களுக்குள்ளான இதர மூவரும் மலேசிய தேசிய பல்கலைக்கழக வேந்தர் துவாங்கு முகரிஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.

இவ்விபத்துக்கான காரணத்தைக்  கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.