ECONOMY

சிப்ஸ் மாநாட்டின் முதல் இரு தினங்களில் 112 கோடி வெள்ளி பரிவர்த்தனை பதிவு

8 அக்டோபர் 2022, 2:39 PM
சிப்ஸ் மாநாட்டின் முதல் இரு தினங்களில் 112 கோடி வெள்ளி பரிவர்த்தனை பதிவு

கோலாலம்பூர், அக் 8 - எட்டாவது முறையாக நடத்தப்பட்ட சிலாங்கூர் அனைத்துலக  வர்த்தக உச்ச நிலை மாநாட்டின் (சிப்ஸ் 2022) முதல் இரு தினங்களில் 112 கோடி வெள்ளி பரிவர்த்தனை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடக்க இலக்கான 35 கோடி வெள்ளியைவிட இது மூன்று மடங்கு அதிகமாகும் என்று முதலீடு, தொழிலியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

பெரும்பாலும் உற்பத்தி மற்றும் தளவாடத் துறைகளில் செய்யப்பட்ட பங்களிப்பின் வழி இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.

இது உண்மையில் மாநில அரசுக்கும் மாநாட்டின் ஏற்பாட்டாளருக்கும்  (இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட்) கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த நிகழ்ச்சி நாளை பொது பார்வையாளர்களுக்காக திறக்கப்படுவதால் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

நாளை மேலும் 35 கோடி வெள்ளி மதிப்பிலான பரிவர்த்தனையை செய்ய முடியும் என எதிர்பார்க்கிறேன். இதன் மொத்த பரிவர்த்தனையின் மதிப்பு 140 கோடி வெள்ளி முதல் 150 கோடி வெள்ளி  வரை இருக்கும் என்று அவர் இன்று சிலாங்கூர் எஸ்.எம்.இ. இலக்கவியல் மாநாட்டைத் தொடக்கி வைத்தப் பின்னர்  செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த மாநாட்டின் மூலம்  சிலாங்கூரை புகழ்பெற்ற சர்வதேச வர்த்தக மையமாக மாற்றுவதற்கான எங்கள் இலக்கை நாங்கள் அடைந்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.