ANTARABANGSA

எலிசபெத் அரசியாரின் இறுதி சடங்கில் மலேசியா சார்பில் மாமன்னர் தம்பதியர் கலந்து கொள்வர்

15 செப்டெம்பர் 2022, 6:40 AM
எலிசபெத் அரசியாரின் இறுதி சடங்கில் மலேசியா சார்பில் மாமன்னர் தம்பதியர் கலந்து கொள்வர்

புத்ரா ஜெயா, செப் 15- வரும் திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் இரண்டாம் எலிசபெத் அரசியாரின் இறுதிச் சடங்கில் மலேசியாவைப் பிரதிநிதித்து மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா தம்பதியர் கலந்து கொள்வர்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா இத்தகவலை நேற்று உறுதிப்படுத்தினார். இங்கு நடைபெற்ற வெளியுறவு அமைச்சின் சிறந்த சேவைக்கான விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நீண்ட காலம் அரியணையில் இருந்த இரண்டாம் எலிசபெத் அரசியார் கடந்த 8 ஆம் தேதி  96வது வயதில் ஸ்காட்லாந்து, பால்மோரல் அரண்மனையில் காலமானார்

வரும் 19 ஆம் தேதி நல்லடக்கச் சடங்கு நடைபெறும் வரை அவரது நல்லுடல் பக்கிம்ஹாம் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும். வேஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள அரச கல்லறையில் தனது கணவர் பிலிப் கல்லறைக்கு அருகே எலிசபெத் அரசியார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.