ANTARABANGSA

எலிசபெத் அரசியார் காலமானார்

9 செப்டெம்பர் 2022, 3:07 AM
எலிசபெத் அரசியார் காலமானார்

பால்மோரல், ஸ்காட்லாந்து, செப் 9 - பிரிட்டனை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியும் எழுபது ஆண்டுகளாக  நாட்டை வழி நடத்தியவருமான எலிசபெத் அரசியார் நேற்று காலமானார். அன்னாருக்கு வயது 96.

அரசியாரின் மறைவு குறித்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று  வெளியிட்டது.

அரசிமார் இன்று பிற்பகல் பால்மோரலில் அமைதியாக தனது இறுதி மூச்சை விட்டார்  என்று பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்வழி அரசியாரின் மூத்த புதல்வர் சார்ல்ஸ் (வயது 73) இயல்பாக இங்கிலாந்தின் மன்னராகவும் ஆஸ்திரேலியா,கனடா, நியுசிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் தலைவராகவும்  ஆகிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.