ECONOMY

கின்ராரா தொகுதி ஏற்பாட்டில் சமூக கலைவிழா- இன்று நடைபெறுகிறது

8 மே 2022, 4:57 AM
கின்ராரா தொகுதி ஏற்பாட்டில் சமூக கலைவிழா- இன்று நடைபெறுகிறது

ஷா ஆலம், மே 8 - கின்ராரா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் கலைவிழா இன்று தாமான் ரிக்ரியாசி வாவாசான் பூச்சோங்கில்  நடைபெறும் என்று  சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00  மணி வரை நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு அவர் பூச்சோங் வட்டார மற்றும் சிலாங்கூர் மக்களை கேட்டுக் கொண்டார்.

இந்த கலைவிழா துவா ஸ்பேஸ் டான்ஸ் தியேட்டர், பிசிபி பப்ளிகேஷன்ஸ்,  கல்சர், கிரியேட்டிவ் டூரிசம் அசோசியேஷன் ஆகியவற்றுடன் இணைந்து  நடத்தப்படுகிறது.

கோவிட்-19 நோய்ப் பரவல்  காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மக்கள் தங்கள் மகிழ்வாக பொழுதைப் போக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

புகைப்படம் எடுக்கும் போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளைக் காண அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று சிலாங்கூர் கினியிடம் கூறினார்.

கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள்,  குழந்தைகளுக்கான வர்ணம் தீட்டும் போட்டி மற்றும் பூச்சோங்கின் வரலாறு குறித்த கண்காட்சி ஆகியவையும் அங்கு நடைபெறும் நடவடிக்கைகளில் அடங்கும் என்றார் அவர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.