ANTARABANGSA

ஏர் ஆசியா இந்தியாவை கொள்முதல் செய்ய ஏர் இந்தியா திட்டம்

28 ஏப்ரல் 2022, 12:56 PM
ஏர் ஆசியா இந்தியாவை கொள்முதல் செய்ய ஏர் இந்தியா திட்டம்

புது டில்லி, ஏப் 28- மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா இந்தியாவை கையகப்படுத்த ஏர் இந்தியா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தனது விமான வர்த்தகத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில் டாட்டா குழுமம் இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக இந்திய ஊடகங்கள் நேற்று கூறின.

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த ஜனவரி மாதம் கொள் முதல் செய்த டாட்டா குழுமம், ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தில் 83.67 விழுக்காட்டு பங்குகளை வைத்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அனைத்துலக வர்த்தக அடையாளத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விரிவாக்க நடவடிக்கையை அது மேற்கொள்கிறது.

ஏர் ஆசியா இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகளை அதன் சொந்த வர்த்தகத்துடன் இணைக்க ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவின் நம்பிக்கைக்கு எதிரான ஒழுங்கு முறை போட்டி ஆணையத்தை அணுகியுள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா கூறியது.

ஏர் ஆசியாவின் முழு பங்குரிமையையும் ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்துவது தொடர்பான பரிந்துரையை இது உள்ளடக்கியுள்ளது என அது குறிப்பிட்டது.

ஏர் ஆசியா நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது விமானச் சேவையை தொடக்கியது. தற்போது மலேசியாவின் ஏர் ஆசியா குழுமம் ஏர் ஆசிய இந்தியாவில் 16.33 விழுக்காட்டு பங்குகளை வைத்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.