கோலாலம்பூர், ஏப் 17- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று சற்று உயர்ந்து 9,705 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 9,673 ஆக இருந்தது.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 49 ஆக அல்லது 0.5 விழுக்காடாக பதிவான வேளையில் 9,656 பேர் அல்லது 99.5 விழுக்காட்டினர் லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்றைய சம்பவங்களுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்து 82 ஆயிரத்து 402 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
நேற்று 14,267 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 24 ஆயிரத்து 125 ஆக பதிவாகியுள்ளது. இது தவிர நோயின் தீவிர பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 108,523 ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் புதிதாக பதிவான 10 நோய்த் தொற்று மையங்களுன் சேர்த்து தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு கண்டுள்ளது என்றார் அவர்.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் பயன்பாடு புத்ரா ஜெயாவில் 56 விழுக்காடாக உள்ள வேளையில் இதர மாநிலங்களில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக வருமாறு-
1 ஆம் பிரிவு -4,653 சம்பவங்கள் (47.95 விழுக்காடு
2 ஆம் பிரிவு – 5.003 சம்பவங்கள் (51.55 விழுக்காடு)
3 ஆம் பிரிவு – 16 சம்பவங்கள் (0.16 விழுக்காடு)
4 ஆம் பிரிவு – 15 சம்பவங்கள் (0.15 விழுக்காடு
5 ஆம் பிரிவு – 18 சம்பவங்கள் (0.19 விழுக்காடு)


