ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் அரசின் வெள்ள நிவாரண நிதியாக 13.26 கோடி வழங்கியுள்ளது.

25 மார்ச் 2022, 4:01 PM
சிலாங்கூர் அரசின் வெள்ள நிவாரண நிதியாக 13.26 கோடி வழங்கியுள்ளது.

ஷா ஆலம், சிலாங்கூர் மாநில அரசு, பாங்கிட் சிலாங்கூர் உதவி (BSB) நிதி RM132.628 மில்லியனை அனைத்து நிலம் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு (PTD) இம்மாதம் 16 ந் தேதி வரை அனுப்பியுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கடந்த டிசம்பரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மொத்தம் 118.250 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டு, நில மற்றும் மாவட்ட அலுவலகங்களில் மீதமுள்ள தொகை ரிம14.378 மில்லியன் ஆகும்.

“இன்னும் 8,000 குடும்பங்களுக்குச் சுமார் 8 மில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது. கொஞ்சம் பாக்கி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், PTDயின் பாக்கெட்டில் இன்னும் RM14 மில்லியன் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

"எனவே, (ஒதுக்கீடு) போதுமானது மற்றும் பெட்டாலிங், கிள்ளான், உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய இடங்களில் மாவட்ட அளவில் விநியோகிக்கப்பட்டுள்ளது," என்று அவர் இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற அமர்வில் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு, மறுபரிசீலனை செயல்முறை தேவைப்படும் விண்ணப்பங்கள் மீண்டும் அனுப்பப்பட்டதைத் தவிர, சில விண்ணப்பங்கள் மேலெழுந்தவாரியாக இருப்பதாக ஒப்புக்கொண்டார்.

"இப்போது நாங்கள் அரங்குகளில் விநியோகத்தை ஏற்பாடு செய்யவில்லை, மீதி (பிஎஸ்பி) பெறுநர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளப்படும் மற்றும் வங்கி கணக்கு வழி டெலிவரி செய்யப்படும்," என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் அரசாங்கம் உள்கட்டமைப்பைச் சரிசெய்வதற்கு RM100 மில்லியன் நிதியை அறிவித்தது, அது தவிர , அதாவது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் RM1,000 வழங்குவதும்,  வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பங்களின் அடுத்த உறவினர்களுக்கு RM10,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

டிசம்பர் 21 அன்று அறிவிக்கப்பட்ட உதவியின் மூலம் 114,081 குடும்பத் தலைவர்கள் பயனடைந்தனர்.பிப்ரவரி 28 நிலவரப்படி, கிள்ளான் அதிகபட்சமாக 60,427 குடும்பங்களும், அதைத் தொடர்ந்து பெட்டாலிங் (20,948 குடியிருப்பாளர்கள்) மற்றும் கோலா லங்காட் (10,904 பேர்) பெற்றனர்.

உலு லங்காட்டில் மொத்தம் 7,834 குடும்பங்கள்; 6,878 (சிப்பாங்), 5,915 (கோலா சிலாங்கூர்) மற்றும் 1,041 (கோம்பாக்) ஆகியோரும் உதவியைப் பெற்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.