ANTARABANGSA

மலேசியாவில் 12 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது

21 மார்ச் 2022, 7:46 AM
மலேசியாவில் 12 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 21 – நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட மொத்தம் 1,263,287 பேர் அல்லது 35.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், 12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளையோரில் 28 லட்சத்து 43 ஆயிரத்து 805 பேர் அல்லது 94.6 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 42 ஆயிரத்து 399 பேர் அல்லது 94.6 விழுக்காட்டினர் தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

நாட்டில் மொத்தம் 1 கோடியே 54 லட்சத்து 83 ஆயிரத்து 571 பேர் அல்லது 65.8 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். அதோடு 2 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 182 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 19 ஆயிரத்து 105 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

9,849 முதல் டோஸ்கள், 1,116 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 16,365 பூஸ்டர் டோஸ்கள்  என மொத்தம் 27,330 டோஸ்கள் வழங்கப்பட்டன, இது தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசியின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 கோடியே 84 லட்சத்து 84 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட்-19 காரணமாக நேற்று 71 இறப்புகள் பதிவாகியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.