ANTARABANGSA

எம்பிஐ விளையாட்டு நடவடிக்கைகளுக்கு RM500,000 நிதி ஒதுக்கியுள்ளது

20 மார்ச் 2022, 5:48 AM
எம்பிஐ விளையாட்டு நடவடிக்கைகளுக்கு RM500,000 நிதி ஒதுக்கியுள்ளது

செர்டாங், மார்ச் 20: சிலாங்கூர் மந்திரி புசார் காப்ரேசன் அல்லது எம்பிஐத் தனது பெருநிறுவனச் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க RM500,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநிலத்தின் பல விளையாட்டு சங்கங்களுக்கு இதுவரை RM50,000 விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனச் சமூகப் பொறுப்புத் தலைவர் கூறினார்.

“இந்த ஒதுக்கீடு சமூகம், கிராமம் மற்றும் வீட்டு மட்டங்களில் திட்டங்கள் அல்லது விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளுக்கு நிதியுதவி உள்ளது.

“அதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஸ்பான்சர்ஷிப்பையும் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் மற்றும் உதவத் தயாராக இருக்கிறோம், ”என்று அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

இன்று பிற்பகல் இங்குள்ள யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா (யுபிஎம்) ரக்பி மைதானத்தில் சிலாங்கூர் ரக்பி யூனியனின் தலைவர் சையத் ஆல்ட்ரின் சையத் அகமது கபீரிடம் ரிம15,000 நன்கொடையாக வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

நன்கொடைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்கள் தேவைப்படுபவர்கள் தாங்கள் நடத்த விரும்பும் நிகழ்ச்சித் தாள்களை உடன் எடுத்துக் கொண்டு எம்பிஐச் சந்திக்கலாம் என்று அகமது அஸ்ரி கூறினார்.

"எந்த ஒரு பேட்டி விளையாட்டாக இருந்தாலும் அனைத்து விண்ணப்பங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். "அமெச்சூர் அல்லது 'ஜூனியர்' திட்டம் எதுவாக இருந்தாலும், அனைத்து விண்ணப்பங்களையும் நாங்கள் ஆய்வு செய்வோம்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.