ECONOMY

2025ல் வறட்சி ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, சிலாங்கூர் நீர் ஆதாரங்களை முன்கூட்டியே தயார்படுத்த திட்டமிட்டுள்ளது

18 மார்ச் 2022, 4:48 AM
2025ல் வறட்சி ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, சிலாங்கூர் நீர் ஆதாரங்களை முன்கூட்டியே தயார்படுத்த திட்டமிட்டுள்ளது

ஷா ஆலம், மார்ச் 18: 2025-ல் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள வறட்சியின் போது அப்போதைய நீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் நீர்வள மேலாண்மை நிர்வாகம்  மற்றும் மாநில அரசும்  முழுமையாக  கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.

அணைகளில் இருந்து வெள்ள நீர் மற்றும் உபரி நீரைச் சேகரிக்கத் திட்டமிடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.

“சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளைப் பட்டியலிடுவதன் மூலம் சேமிப்பு மேம்பாட்டைச் செயல்படுத்தியுள்ளது.

"வறண்ட காலங்களில் மாற்று நீர் ஆதாரங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகள் மற்றும் தற்போதுள்ள குளம் நீர் உந்தி இயக்கத்தின் (OPAK) கீழ் நீர்த்தேக்கக் குளங்களை நாங்கள் பயன் படுத்துவோம்," என்று அவர் கூறினார்.

இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜின் மாட்சிமை சுல்தான் ஆணையின் நிறைவு அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.

நேற்றைய விவாத அமர்வின் போது சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இஸாம், பின்னர்த் தேவைப்படும் போது செயல்படும் வகையில் குழாய்கள் மற்றும் குழாய் அமைப்புகள் போன்ற நீர் வழங்கல் தொடர்பான அனைத்து உள்கட்டமைப்புகளையும் தனது தரப்பு ஆய்வு செய்யும் என்றார்.

கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறையுடன் இணைந்து லுவாஸ் நிலத்தடி நீரின் ஆதாரத்தை நீர் ஆதாரமாகப் பயன்படுத்துவதையும் அடையாளம் கண்டுள்ளது என்று அவர் கூறினார்.

“பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி உடன் மாநில அரசு, விவேகமான நீர் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக நீர் சேமிப்பு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.