ANTARABANGSA

இருவரை கைது செய்து, RM19.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.

15 மார்ச் 2022, 11:30 AM

ஷா ஆலம், மார்ச் 15: கடந்த வியாழன் அன்று, இங்கு அருகிலுள்ள ஜென்ஜரோமில் உள்ள பண்டார் சௌஜானா புத்ராவில் நடந்த சோதனையில், சுமார் 19.5 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 54.06 (கிலோ) எடையுள்ள போதைப்பொருளைப் போலிசார் கைப்பற்றி,  தந்தை மற்றும் மகனைக் கைது செய்தனர்.

சிலாங்கூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஏசிபி அகமது ஜெஃப்ரி அப்துல்லா, 49 வயதான தாய்லாந்து நபரும் அவரது 26 வயது உள்ளூர் மகனும் மாலை 4.50 மணியளவில் வாகன நிறுத்துமிடத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

சோதனையில் 10.2 கிலோ எடையுள்ள போதைப்பொருளைக் கொண்ட குவான்யின்வாங் என்று குறிக்கப்பட்ட 10 சீனத் தேநீர் பாக்கெட்டுகள் போன்று தயார் செய்யப்பட்ட பழுப்பு நிறப் பெட்டியைப் போலீசார் கைப்பற்றினர்.

“அதைத் தொடர்ந்து, அதே நாளில் மாலை 6.20 மணியளவில், இருவரின் வழிகாட்டுதலின் பேரில் பண்டார் சௌஜனா புத்ராவில் உள்ள இரண்டு மாடி வீட்டைப் போலீசார் ஆய்வு செய்தனர்.

"ஆய்வின் முடிவுகளில், சீனத் தேநீர் பாக்கெட்டுகள் போன்று தயார் செய்யப்பட்ட 43 பாக்கெட்டுகளைக் கொண்ட மேலும் இரண்டு பழுப்பு நிறப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன, ஒவ்வொன்றும் 43.86 கிலோ எடையுள்ள ஒரே மாதிரியான போதைப்பொருளைக் கொண்டிருந்தன.

இந்தப் போதைப்பொருள் அண்டை நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது, இது மாநிலத்தில் சந்தைப்படுத்தப்பட இருந்தது, ”என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் மேலதிக விசாரணைக்காகக் கிளந்தான் அடையாள அட்டையை கொண்டிருந்த இருவரும் மார்ச் 17 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.