ECONOMY

மாநில அரசு சம்பந்தப்பட்ட அனைத்து பரிவுமிக்க வணிக மையங்களிலும் கோழி விநியோகம் அதிகரிப்பு

12 மார்ச் 2022, 8:44 AM
மாநில அரசு சம்பந்தப்பட்ட அனைத்து பரிவுமிக்க வணிக மையங்களிலும் கோழி விநியோகம் அதிகரிப்பு

அம்பாங், மார்ச் 12: பொதுமக்களின் அதிகத் தேவையை அடுத்து, மாநில அரசின் பரிவுமிக்க வணிக மையங்களுக்கு கோழிகள் வழங்குவதை மாநில அரசு 1,000 ஆக உயர்த்துகிறது.

இதற்கு முன் அனைத்து மாநில அரசின் பரிவுமிக்க வணிக மையங்களுக்கு 500 கோழிகளை வழங்கியதாக வேளாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார். இப்பொழுது மக்களிடமிருந்து “கோழிகளுக்கு அதிக கோரிக்கை வருவதால், ஒவ்வொரு இடத்திலும் சப்ளையை 500லிருந்து 1,000 ஆக உயர்த்தவுள்ளோம்.

"இயக்க நேரமும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. அனைவருக்கும் மலிவான விலையில் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்,” என்று இஸாம் ஹாஷிம் இன்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

பண்டான் இண்டா மாநிலச் சட்டமன்றத்தில் மாநில அரசின் பரிவுமிக்க வணிக மையங்களுக்கு கிடைத்த மக்களின் ஆதரவு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்றார்.

காலை 10 மணிக்கு மட்டுமே கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் காலை 9 மணி முதல் ஜாலான் பண்டான் 8, பண்டான் ஜெயாவில் உள்ள இடத்தில் வரிசையில் நிற்கத் தொடங்கி விடுகின்றனர்.

" மாநில அரசின் பரிவுமிக்க வணிக மையங்களின் விற்பனை விலை சந்தையை விட மலிவாக இருப்பதால் குடியிருப்பாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த இடம் பார்வையிடுவதற்கு ஒரு மூலோபாயமானது.

"பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் சுமையைக் குறைக்க, சேவை மையம் முதல் 200 வருகையாளர்களுக்கு RM10 வவுச்சர்களையும் வழங்குகிறது," என்று அவர் கூறினார்.

இதே நிகழ்ச்சி கம்போங் மிலாயு சுபாங், சுபாங் மற்றும் ஜாலான் பெர்மாய் 2, தாசிக் மெர்மாய் ஆகிய இடங்களிலும் நடைபெற்றதாகப் பண்டான் இண்டா மாநிலச் சட்டமன்ற உறுப்பினரான அவர் கூறினார்.

பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஹரி ராயா பெருநாள் வரை தொடரும். மாநில அரசின் பரிவுமிக்க வணிக மையங்களில் குறைந்த விலையில் கோழி, முட்டை, மாட்டு இறைச்சி மற்றும் மீன் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கிடைக்கின்றது..

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.