ECONOMY

சிலாங்கூர் காவல்துறை உரிமமற்ற வட்டி முதலைகளின் நடவடிக்கையை முறியடித்தது

12 மார்ச் 2022, 5:07 AM
சிலாங்கூர் காவல்துறை உரிமமற்ற வட்டி முதலைகளின் நடவடிக்கையை முறியடித்தது

ஷா ஆலம், மார்ச் 12 - சிலாங்கூர் காவல்துறை கடந்த வியாழன் (மார்ச் 10) இங்குள்ள காஜாங்கில் ஒரு சோதனையில் உரிமம் பெறாத பணக்கடன் வழங்கும் குழுவை   சந்தேகத்தின் பேரில் தடுத்து  12 பெண்கள் உட்பட 18 நபர்களைக் கைது செய்தனர் அனைவரும் உள்ளூர்வாசிகள்.

சிலாங்கூர் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஏசிபி அஸ்மான் அலி கூறுகையில், 18 முதல் 52 வயதுடைய சந்தேக நபர்கள், ஜாலான் பாசிர் எமாஸ், சுங்கை சுவா, காஜாங் ஆகிய இடங்களில் உள்ள வளாகத்தில் காலை 10.20 மணிக்குக் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

சிண்டிகேட் சுமார் ஆறு மாதங்களாகச் செயல்பட்டதாக அவர் நம்பினார்.“ஒரு சோதனையைத் தொடர்ந்து, கணினிகள், கடன் வாங்கியவர்களின் தகவல்கள் அடங்கிய கோப்புகள், பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள் மற்றும் RM21,598 ரொக்கம் உள்ளிட்ட பல பொருட்கள் மற்றும் ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

 

1951 ஆம் ஆண்டு ( வட்டி முதலை ) பணக் கடன் வழங்குபவர்கள் சட்டம் பிரிவு 5 (2) இன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றவாளிகளுக்கு RM10 லட்சம் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அஸ்மான் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.